திங்கள், 15 ஏப்ரல், 2019


வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்


நார்ட்டன் எனும் புகழ்பெற்ற ஆங்கில வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருந்தார். 'சான் வாலீஸ்' என்ற நீதிபதியும் இன்னொரு இளைய நீதிபதியும் அவரது வாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தனர். "நார்ட்டன்" புத்தகங்களைப் புரட்டி அவைகளிலிருந்து நீண்ட பகுதிகளைப் படித்துக் காட்டியவாறு இருந்தார். "நார்ட்டன்" தனது குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் இடத்திற்குத் தகுந்தாற்போல் படித்ததால், நீதிபதி 'சான் வாலீசின்' காதில் தாலாட்டு மாதிரி பட்டது போலும். 'சான் வாலீசின்' கண்கள் மூடின. தலை நெஞ்சில் புதைந்தது. அது போலவே நீதிபதி 'சான் வாலீசின்' டபேதாரையும் தூக்கம் ஆட்டவே, அவனும் தூங்க ஆரம்பித்தான். இதைக் கவனித்த "நார்ட்டனுக்கு" சிறிது ஆத்திரம் வந்தது. அவர் தன் முன்னால் இருந்த புத்தகக் கட்டைத் தள்ளினார். அது தரையில் விழுந்து பெரும் சத்தத்தை எழுப்பியது. டபேதார் தூக்கத்திலிருந்து தடால் என எழுந்தான். நீதிபதி 'சான் வாலீசும்' திடீரென்று கண்விழித்தார்.
"நார்ட்டன்" 'மாண்புமிகு நீதிபதியே நான் வருந்துகிறேன் எனக் கூறினார்.
"ஏன் என்ன விஷயம் நார்ட்டன்?"
" ஓ, ஒன்றுமில்லை. அய்யா, டபேதார் தானும் ஒரு நீதிபதியைப்போல் நீதிமன்றத்தில் தூங்கமுடியும் என்று கருதுகின்றான்" என்று அமைதியாகப் பதிலளித்தார் "நார்ட்டன்"
---"வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்" அய்யா.பொ.வேல்சாமி  அவர்கள் 

முகநூலில்
 அடையாள காட்டிய மிகச் சிறந்த, சட்டத்துறை வரலாறும், சுவையான நிகழ்ச்சிகளும் நிறைந்த நல்ல நூல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக