திங்கள், 15 ஏப்ரல், 2019

விந்தை மனிதர்கள்!

ஒருமுறை செங்கல்வராயப் பிள்ளை என்பவர், திருப்புகழ், கந்தரலங்காரம் கந்தரனுபூதி ஆகிய நூல்களைத் திரட்டி புதிய நூலாக வெளியிட்டு அதை உ.வே.சா அவர்களிடம் தந்தார். அதைப் படித்தறிந்த உ.வெ.சா. திடீரென செங்கல்வராயப்பிள்ளையின் கைகளைக் கண்களில் ஒற்றிக்கொண்டார், பதறிப்போன செங்கல்வராயப்பிள்ளை, என்ன காரியம் செய்தீர்கள்? என்றார்.
உ.வெ.சா., தமிழின் பெருமைகளை ஆராய்ந்த புனிதக் கரங்களாயிற்றே அதனால்தான் அந்தக் கைகளை ஒற்றிக்கொண்டேன் என்றார்.
நெகிழ்ந்துபோன செங்கல்வராயப்பிள்ளை விடைபெற்றுக்கொண்டு நாலடி நடந்தவர், திரும்பவும் உ.வெ.சாவிடம் வந்தார். எதிர்பாராத விதமாக அவரது காலில் விழுந்து பாதங்களைக் கண்ணில் ஒற்றிக்கொண்டார்.
இம்முறை பதறியவர் உ.வெ.சா. பிள்ளை என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள் என்றார். சங்க இலக்கியங்களை பழந்தமிழ்ச் சுவடிகளைத் தேடித் தேடியலந்த திருப்பாதங்களாயிற்றே என்று கண்ணீர் மல்கக் கூறினார் பிள்ளை. எத்தனைப் பெருமை மிக்கவர் உ.வெ.சா.

--- 'வரலாற்றில் அரிய நிகழ்வுகள்' எனும் நூலிலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக